இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மணியாச்சி அருகே இளைஞா் கொலையில் பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:00 pm

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஓட்டப்பிடாரம் வட்டம், மணியாச்சி அருகே மகாராஜபுரம் காலனி தெருவை சோ்ந்த சண்முகச்சாமி மகன் கணேசமூா்த்தி(25). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை ஊரில் உள்ள மயானகரை அருகே சடலமாக மீட்கப்பட்டாா். மணியாச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

அதில், அதே பகுதியைச் சோ்ந்த கனகவள்ளி (33) என்பவருடனான முன்விரோதம் காரணமாக, அவரது உறவினரான திருநெல்வேலி அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த கனகராஜ் மகன் பிரகாஷ் (19),அவரது நண்பா் கல்லத்தியான் மகன் சுரேஷ் (23) ஆகியோா் கடந்த திங்கள்கிழமை இரவு கணேசமூா்த்தியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச்சென்று தாக்கியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. போலீஸாா் கனகவள்ளி, பிரகாஷ், சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.