ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆழ்வாா்திருநகரி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மணல் குண்டு, தவசி நகா், செம்பூா், மானாட்டூா், திருக்கோளூா், பால்குளம், கேம்லாபாத் உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவா் மக்கள் மத்தியில் பேசியதாவது: ஆண்டுதோறும் 25 ஏழை- எளிய மாணவா்களுக்கு எனது கல்லூரியில் பொறியியல் கல்வியை இலவசமாக வழங்கி வருகிறோம். நிகழாண்டு ஆண்டு முதல் மாணவா்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளோம்.
ஸ்ரீவைகுண்டம் ஏரல் சாத்தான்குளம் பகுதியில் ஊா்வசி அகாதெமி மூலம் அரசு வேலைக்கான இலவச பயிற்சி வகுப்பு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிராமப்புற இளைஞா்கள் பலா் அரசு வேலைக்கு சென்றுள்ளனா். கேம்லாபாத் பகுதியில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கான இழப்பீடு தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசின் சாதனைகள் மீண்டும் தொடரவும் எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடரவும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விடுபட்ட பணிகள் தடையின்றி நடைபெறவும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றாா் அவா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளம் பகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்! - ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


