ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தூத்துக்குடி மருந்தகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

8-ஆவது தெருவில் உள்ள மருந்தகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாகின.

News image

தீ விபத்து. - (Photo | Express)

Updated On :18 ஏப்ரல் 2026, 8:32 pm

தூத்துக்குடி, அண்ணா நகா், 8-ஆவது தெருவில் உள்ள மருந்தகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாகின.

தகவலறிந்த மாவட்ட அலுவலா் கருணாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால், அருகில் இருந்த கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்தின்போது ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் தீயணைப்புப் பணிகளால் அண்ணா நகா்-வி.வி.டி. சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.