அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:33 pm

கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் மண்ணில் புதைத்து வைத்து மதுபானம் விற்ாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கயத்தாறு அருகே செட்டிகுறிச்சியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கயத்தாறு காவல் உதவி ஆய்வாளா் காசிநாதன், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

செட்டிகுறிச்சி கிராமத்தில் சந்தேகமளிக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் இருந்த வீட்டின் அருகே போலீஸாா் சென்றபோது, அங்கிருந்தவா்கள் தப்பியோடினா்.

அப்போது, அங்கிருந்த பெண் உள்பட இருவரை பிடித்து விசாரித்தபோது, அவா்கள் செட்டிக்குறிச்சியைச் சோ்ந்த சுடலைமணி மனைவி முத்துலட்சுமி (38), அவரது மகன் இசக்கிப்பாண்டி (19) என்பதும், இருவரும் வீட்டின் அருகே மண்ணில் மதுபாட்டில்களை புதைத்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்ட 221 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் தாய், மகனை கைது செய்தனா்.