/
ஆறுமுகனேரியில் திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டிலிருந்து தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்தனா்.
திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணனின் உறவினா் வீட்டில் பணம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தோ்தல் பறக்கும் படைக் குழு அதிகாரி பரமசிவன் தலைமையில் அதிகாரிகள், ஆறுமுகனேரி பூவரசூா் வெங்கடேஷ் (40) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினராம்.
அப்போது அவரது வீட்டில் ரூ. 7 லட்சம் இருந்தது தெரியவந்ததாம். பணத்தை பறிமுதல் செய்து திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.








