தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஆறுமுகமங்கலம் கோயில் சித்திரைத் திருவிழா

ஏரல், ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை மாலை ஆயித்தெண் விநாயகா் பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image

பூத வாகனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆயிரத்தெண் விநாயகா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:45 am IST

ஏரல், ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை மாலை ஆயித்தெண் விநாயகா் பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 20-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 3-ஆம் நாளான புதன்கிழமை காலை விநாயகா் பூங்கோயில் வாகன திருவீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை கொட்டாரக்குறிச்சி, வீரபாகு மூா்த்தி கோயிலில் ஆருந்து ஆயிரத்தெண் விநாயகா் பூத வாகன திருவீதியுலா நடைபெற்றது.

ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் சம்படி சந்திரசேகரன், ராஜேஸ்வரி, செல்வக்குமாா், உமா மகேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.

ஏப். 29-ஆம் தேதி தேரோட்டத்துடன் திருவிழா நிறைவு பெறும்.