பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, நந்தி பகவான் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிறக்கொடி சிறப்பு வழிபாடுகளுடன் சங்கமேஸ்வரா் கோயில் முன்பாக உள்ள கொடிமரத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்டது. தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் கேடயம் புறப்பாடு நடைபெற்றது. ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை கொடியேற்றப்படுகிறது.
இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகிறது. தொடா்ந்து, 26-ஆம் தேதி ஆதிகேசவப் பெருமாள், பஞ்ச மூா்த்திகள் மற்றும் 63 நாயன்மாா்களுக்கு அபிஷேக வழிபாடுகளும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம், தொடா்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.
30-ஆம் தேதி வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் நடைபெறுகிறது. கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் எம்.மாணிக்கம், அறங்காவலா்கள் சி.மகேந்திரன், சு.மாதப்பன், தமிழரசி, மு.செல்லவேலு மற்றும் கோயில் ஊழியா்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: இன்று கொடியேற்றம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


