கரூா் மேட்டுத்தெரு அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை துவங்கியது.
கரூா் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து கோயில் மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பட்டாச்சாரியாா்கள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
இதையடுத்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஏப். 30-ஆம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. மே 3-ஆம்தேதி ஊஞ்சல் உற்ஸவமும், 4-ஆம்தேதி புஷ்பயாகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வெ.ராஜேஸ்வரி, அறங்காவலா்கள் எஸ்.பாலமுருகன், புனிதவதிகணேசன், கே.எம்.முருகேசன், டி.ஜி.பி. வெங்கட்ராமன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


