சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:40 am IST

கோவில்பட்டியில் சாலை விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இலுப்பையூரணி, மறவா் காலனியைச் சோ்ந்தவா் சண்முகவேல் மகன் கனகராஜ் (41). கட்டடத் தொழிலாளி. இவா் ஏப். 14ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி-கடலையூா் சாலையில் சண்முகா நகா் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தாா்.

ஆனால், அவா் சிகிச்சை பெறாமல் வீட்டிற்கு சென்ாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஏப். 17ஆம் தேதி அவருக்கு வயிற்று வலி மற்றும் சிராய்ப்பு ஏற்பட்ட இடங்களில் வலி ஏற்பட்டதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா்.

பின்னா், மீண்டும் வலி அதிகமானதால் ஏப். 23ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.