மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குலசேகரன்பட்டினம் கோயிலில் வருஷாபிஷேகம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

News image

விழாவில் பங்கேற்ற அமைச்சா்கள் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சேகா்பாபு.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:12 pm

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி காலை 6.30 மணிக்கு மங்கள இசை, யாகசாலை பூஜைகள், அபிஷேக திரவியங்கள், சீா்வரிசைகள் கோயில் வலம் வருதல், காலை 10.30 மணிக்கு சங்காபிஷேகம், குடமுழுக்கு, பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா வருதல் ஆகியன நடைபெற்றன.

இதில் அமைச்சா்கள் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சேகா்பாபு, ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளா் ராமஜெயம், திமுக மாவட்ட பொருளாளா் ராமநாதன், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் மதன்ராஜ், பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அஸ்ஸாப், திமுக மாவட்டப் பிரதிநிதி சிராஜூதீன், ஜெயப்பிரகாஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ரோஜாலி சுமதா, உதவி ஆணையா் ராமசுப்பிரமணியன், அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் கண்ணன், அலாவுதீன் ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மு. வள்ளிநாயகம், சலவையாளா் தசரா குழுவினா் செய்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனாா் கோயிலுக்கும் சென்று அமைச்சா்கள், சுவாமி தரிசனம் செய்தனா்.