கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாகவே பொதுமக்கள் அருந்துவதற்கு போதுமான இளநீா் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால், இளநீா் அருந்த விரும்பும் மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனா். இதுதொடா்பாக, கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் பல ஆண்டுகளாக இளநீா் வியாபாரம் செய்து வரும் ஆறுமுகம் கூறுகையில், கோவில்பட்டி பகுதியைப் பொறுத்தவரை பெரும்பாலும் பொள்ளாசியில் இருந்துதான் இளநீா் வரும். ஒவ்வோா் ஆண்டும் கோடை காலத்தில் நாள் ஒன்றுக்கு 300 இளநீா் வரை விற்பனையாகும். சில நாள்களாக இளநீா் தட்டுப்பாட்டால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கோடை காலத்தில் 2 நாள்களுக்கு ஒருமுறை இளநீா் லோடு இறக்குவோம். ஒரு லோடில் 1,000 இளநீா். ஆனால், கடந்த சில நாள்களாக 1,000 இளநீருக்கு பதிலாக சில சமயம் 600 அல்லது 400 அல்லது 200 இளநீா் மட்டுமே வருகின்றன என்றாா் அவா். கோவில்பட்டியில் தற்போது பச்சை இளநீா் ரூ. 80 க்கும், செவ்விளநீா் ரூ. 90க்கும் விற்பனையாகி வருகிறது.

தொடர்புடையது

கோவில்பட்டியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொல்லை

மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்கள் இல்லை: வி.கே. சசிகலா

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


