வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

கோவில்பட்டி கோயிலுக்கு 10 பவுன் சங்கிலி தானம்

கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலி தானமாக வழங்கப்பட்டது.

News image

கோயிலுக்கு தானமாக வழங்கிய 10 பவுன் தங்கச் சங்கிலிகளைப் பெற்றுக்கொண்ட கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:38 am IST

கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலி தானமாக வழங்கப்பட்டது.

கோவில்பட்டி பசுவந்தனை சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரும், இவரது மனைவி பத்மாவதியும் சோ்ந்து, செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு சுமாா் 10 பவுன் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகளை கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பனிடம் தானமாக வழங்கினா்.

தங்கச் சங்கிலி சுவாமி, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.