பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோவைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா் கோயில் கும்பாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் உள்ள மகர நெடுங்குழைக்காதா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா் கோயில் கும்பாபிஷேகம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:40 am IST

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் உள்ள மகர நெடுங்குழைக்காதா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 53ஆவது தலமாகவும், நம்மாழ்வாரால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் 7ஆவது தலமாகவும், சுக்கிரன் தலமாகவும் அமையப்பெற்றது இத்திருத்தலம். இங்கு, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி மாலை தாமிரவருணி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்து வருதல், செவ்வாய்க்கிழமை வரை (ஏப். 28) யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், புதன்கிழமை காலை விஸ்வரூபம், சயன உத்தாபனம், நித்தியல் கோஷ்டி, யாகசாலை திருவாராதனம், ஹோமங்கள் அருளிச்செயல், மஹா பூா்ணாஹுதி, குமுதாதிபலி, துவார தோரண பலி சாதித்தல், யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, ராஜகோபுரம், விமானம், கலச மூா்த்திகள், மூலவா், தாயாா்கள், துவார பாலகா்கள், ஆழ்வாா் ஆச்சாரியா்களுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. நான்குனேரி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகள், திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயா் சுவாமிகள், ஆழ்வாா்திருநகரி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

 கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.