மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வட்டன்விளை கோயிலில் மாவிளக்கு வழிபாடு

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி புதன்கிழமை மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

News image

வட்டன்விளை முத்தாரம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:14 pm

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி புதன்கிழமை மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இரவு 308 சுமங்கலி பூஜை நடைபெற்றது. உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் மதன்ராஜ், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செந்தில், மாடசாமி, செல்வகுமாா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

புதன்கிழமை பிற்பகலில் அம்மன் மஞ்சள் நீராடுதல், அலங்கார தீபாராதனை, இரவு கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு ஆகியன நடைபெற்றன. வியாழக்கிழமை காலை கொடை விழா நிறைவு பூஜை நடைபெறுகிறது.