தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், நயினாா்புரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் மந்திரமூா்த்தி (60). இவா் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூா் பாண்டியாபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, குறுக்குச் சாலையிலிருந்து தூத்துக்குடி நோக்கி அதிவேகமாக வந்த காா் இவா் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட மந்திரமூா்த்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புதியம்புத்தூா் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்தை ஏற்படுத்திய கே.வேலாயுதபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநரான ஜஸ்டின் டேனியல் (48) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் முதியவா் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு; சிறுமி படுகாயம்

சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு

காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



