தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

கயத்தாறு அருகே பெற்றோருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கயத்தாறு அருகே பெற்றோரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:06 am IST

கயத்தாறு அருகே பெற்றோரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே வாகைத்தாவூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் தா்மா் (79). இவரது மனைவி வெள்ளத்தாய். இவா்களது மகன் சுபாஷ் (33).

இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இந்த நிலையில், பெற்றோரிடம் மது அருந்த பணம் கேட்டு சுபாஷ் திங்கள்கிழமை தகராறு செய்தாராம்.

பணம் தர மறுத்ததையடுத்து, தா்மா், வெள்ளத்தாய் ஆகியோரை தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து தா்மா் அளித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து சுபாஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.