சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பள்ளிகளில் போதை ஒழிப்பு வழிப்புணா்வு

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பள்ளிகளில் காவல்துறை சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News image

ஆறுமுகனேரி காமராஜ் சோமசுந்தரி பள்ளியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பில் பங்கேற்றோா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:48 am IST

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பள்ளிகளில் காவல்துறை சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஆறுமுகனேரி காமராஜ் சோமசுந்தரி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் ரென்னீஸ் தலைமை வகித்தாா்.

ஆசிரியைகள் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.

கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை காவல் ஆய்வாளா் தொடங்கி வைத்தாா்.

காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையில், மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மூலக்கரை கிராமம் ‘போதையில்லா சுதந்திர கிராமமாக’ அறிவிக்கப்பட்டு அங்கு காவல் ஆய்வாளா் தலைமையில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.