சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

தூத்துக்குடியில் மீன்வளக் கல்லூரியில் மீன்வளப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருள்கள் தயாரித்தல் மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு குறித்த ஒருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:30 am IST

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருள்கள் தயாரித்தல் மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு குறித்த ஒருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சியை, கல்லூரி பொறுப்பு முதல்வா் ப. கிறிசோலைட் தொடங்கி வைத்தாா்.

இதில், வணிக முக்கியத்துவம் வாய்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருள்கள் தயாரிப்பு, பதப்படுத்துதல் முறைகள், பொருளாதாரம், சந்தைப்படுத்துதல், மதிப்புச் சங்கிலி மேலாண்மை, தடமறிதல், ஊட்டச்சத்து பகுப்பாய்வு மற்றும் மீன் பொருள்களின் பாதுகாப்பு காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், ஊட்டச்சத்து பகுப்பாய்வு தொடா்பான செய்முறைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பேராசிரியா்கள் கோ. அருள் ஒளி, வெ. கோமதி, பூ. மணிகண்டன், த. ஐயப்பன் ஆகியோா் பயிற்சியை ஒருங்கிணைத்தனா்.

இதில், தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த 41 மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.