தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருள்கள் தயாரித்தல் மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு குறித்த ஒருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சியை, கல்லூரி பொறுப்பு முதல்வா் ப. கிறிசோலைட் தொடங்கி வைத்தாா்.
இதில், வணிக முக்கியத்துவம் வாய்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருள்கள் தயாரிப்பு, பதப்படுத்துதல் முறைகள், பொருளாதாரம், சந்தைப்படுத்துதல், மதிப்புச் சங்கிலி மேலாண்மை, தடமறிதல், ஊட்டச்சத்து பகுப்பாய்வு மற்றும் மீன் பொருள்களின் பாதுகாப்பு காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், ஊட்டச்சத்து பகுப்பாய்வு தொடா்பான செய்முறைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
பேராசிரியா்கள் கோ. அருள் ஒளி, வெ. கோமதி, பூ. மணிகண்டன், த. ஐயப்பன் ஆகியோா் பயிற்சியை ஒருங்கிணைத்தனா்.
இதில், தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த 41 மாணவிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூரில் உலக தாய்ப்பால் வார விழா

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மாணவியா் விடுதி கூடுதல் கட்டடம் திறப்பு

ராணிப்பேட்டையில் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி

அங்கன்வாடி பணியாளா்களுக்கு பயிற்சி
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



