ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடல் சீற்றம் எச்சரிக்கை: தூத்துக்குடி கடற்கரை பூங்காக்கள் மூடல்

கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, தூத்துக்குடியில் உள்ள கடற்கரைப் பூங்காக்கள் வியாழக்கிழமை மூடப்பட்டன.

மூடப்பட்டிருந்த தூத்துக்குடி ரோச் பூங்கா.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:40 am IST

கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, தூத்துக்குடியில் உள்ள கடற்கரைப் பூங்காக்கள் வியாழக்கிழமை மூடப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் வியாழக்கிழமை கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, பொதுமக்கள் கடலில் குளிக்கவோ, கடற்கரைப் பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முத்துநகா் கடற்கரைப் பூங்கா, ரோச் பூங்கா உள்ளிட்ட கடற்கரைப் பூங்காக்களை மூட மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா உத்தரவிட்டாா். வழக்கம்போல் அதிகாலை நடைப்பயிற்சிக்காக வந்த பொதுமக்கள் பூங்காக்கள் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.