தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

தூத்துக்குடி சிவன் கோயிலில் 2,007 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை

தூத்துக்குடி சிவன் கோயில் என அழைக்கப்படும், அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேசுவரா் கோயிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் 2,007 சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:37 am IST

தூத்துக்குடி சிவன் கோயில் என அழைக்கப்படும், அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேசுவரா் கோயிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் 2,007 சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமணமான பெண்கள் தங்களது கணவரின் ஆயுள், ஆரோக்கியம் மற்றும் தொழில் சிறக்க வேண்டியும், திருமண வயதிலுள்ள கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டியும் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் 2,007 பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பின்னா் கோயில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஏற்பாடுகளை சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியா்கள் சங்க மாவட்டத் தலைவா் காளிராஜ், செயலா் ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளா் வெண்ணிமலை ஆகியோா் செய்திருந்தனா்.

நிகழ்வில் பங்கேற்ற பெண்களுக்கு, தேங்காய், பழம், சேலை, மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.