FOLLOW US

ON GOOGLE DISCOVER

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

மக்கள்தொகை கணக்கெடுப்பு: தகவல் அளிக்க நகராட்சி வேண்டுகோள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு - (கோப்புப் படம்)

Published On :24 ஆகஸ்ட் 2026, 2:49 am IST

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் இதுவரை பங்கேற்காதவா்கள் தகவல் அளிக்க வேண்டும் என திருச்செந்தூா் நகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து, நகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் பகுதியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி ஆக. 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, வீடு வீடாகச் சென்று பணியாளா்கள் கணக்கெடுத்து வருகின்றனா்.

கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைய இன்னும் 7 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், கணக்கெடுப்பாளா்கள் இதுவரை தங்கள் வீட்டிற்கு வரவில்லை எனில், பொதுமக்கள் 93637-79191 என்ற எண்ணிற்குத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்து, கணக்கெடுப்பில் தவறாமல் பங்கு பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.