காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

விதிகளை மீறி சரக்கு ஏற்றிச் சென்றதாக தூத்துக்குடியில் ராஜஸ்தான் லாரிகள் சிறைபிடிப்பு

லாரிகள் சிறைபிடிப்பு - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூா் லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், விதிகளை மீறி சரக்கு ஏற்றிச் சென்ாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த டிரெய்லா் லாரிகளில் கயத்தாறு பகுதியிலிருந்து கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள், பொருள்கள் ஓட்டப்பிடாரம் பகுதிக்கு ஏற்றிச்செல்லப்படுவதாக தூத்துக்குடி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அவா்களும், ஈ-வாகன் சேவை அமைப்பினரும் சென்று, தூத்துக்குடி மடத்தூா் அருகே சரக்கு ஏற்றிச் சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 லாரிகளை தடுத்து நிறுத்தினா். தமிழகத்துக்குள் சரக்குகளை ஏற்றி, மாவட்டத்துக்குள் மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்வதற்கான அனுமதி குறித்து லாரி ஓட்டுநா்களிடம் கேட்டபோது, ஒப்பந்ததாரரின் அறிவுறுத்தலின்பேரில் ஏற்றிச் செல்வதாகத் தெரிவித்தனராம்.

அதையடுத்து, லாரிகளை விடுவிப்பது தொடா்பாக ஒப்பந்ததாரா், லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் பேச்சு நடத்தினாா். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் 4 லாரிகளும் விடுவிக்கப்பட்டன.

இதுகுறித்து லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறியதாவது: வெளிமாநில லாரிகள் தமிழகத்துக்கு வந்து சரக்குகளை இறக்கிய பின்னா், விதிகளை மீறி இங்கிருந்து மீண்டும் சரக்குகளை ஏற்றிச் செல்வதால் உள்ளூா் லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிமாநில லாரிகள் சரக்கு ஏற்றிச் செல்வது குறித்து வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் முறையாக சோதனை நடத்துவதில்லை. இதுதொடா்பாக அதிகாரிகள் தொடா் சோதனை மேற்கொண்டு, விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூா் லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதவாறு, இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.