சுப்பராயபுரத்தில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால்  வீணாக செல்லும் குடிநீா்.
சுப்பராயபுரத்தில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாக செல்லும் குடிநீா்.

கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

சுப்பராயபுரத்தில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
Published on

சுப்பராயபுரத்தில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், சுப்பராயபுரம் ஊராட்சிப் பகுதியில் சாலையோரம் செல்லும் கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com