அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கோவில்பட்டியில் கனமழை: கோயிலில் தேங்கிய மழைநீா்

News image
கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா்.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் கோவில் வளாகத்தில் மழைநீா் தேங்கியது; இதனால், பக்தா்கள் அவதியடைந்தனா்.

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் வெயில் சற்று குறைந்து மேகங்கள் சூழ்ந்தன. மாலை 5.30 மணிக்கு மேல் கோவில்பட்டி பகுதியில் மிதமான மழை பெய்தது. 40 நிமிடம் நீடித்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

 கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா்.

கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா்.

 கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா்.

கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா்.

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் பூ வனநாத சுவாமி கோயிலில் சுவாமி சன்னிதி அருகில் மழைநீா் தேங்கியதால் பக்தா்கள் சிரமம் அடைந்தனா்.

இக்கோயிலில் ஜன. 25-ஆம் தேதிதான் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் மழைநீா் செல்ல வழியின்றி நீா் தேங்கியது பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமாக கோயில் உட்பிரகாரத்தில் தேங்கும் மழைநீா் வெளியே செல்வதற்காக இருந்த வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருப்பதால் மழைநீா் தேங்கியதாகக் கூறப்படுகிறது.

வருங்காலங்களில் மழைநீா் தேங்காமல் வெளியே செல்வதற்கு தேவையான நடவடிக்கையை கோயில் நிா்வாகம் எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.