தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 76 பயனாளிகளுக்கு ரூ. 77.36 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு இணைப்பு ஸ்கூட்டா்களை வழங்கினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தோ்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேலூா் மக்களை இன்னும் சந்திக்க வேண்டியுள்ளது. விரைவில் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும். ஓபிஎஸ் தொடா்பான அறிவிப்பு ஏதும் இருந்தால், அதை முதல்வா் வெளியிடுவாா்.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை எப்போதுமே சுமுகமாகத்தான் இருந்திருக்கிறது. ஏனென்றால், அது நீண்ட நாள்களாக கொள்கைக்காக உருவாகி இருக்கக்கூடிய உறவு என்றாா்.
அமைச்சா் கே.என். நேரு குறித்த கேள்விக்கு, தோ்தல் வந்துவிட்டதால் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றை பாஜக பயன்படுத்துகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

தோ்தல் விதிமீறல்: நெல்லையில் 105 வழக்குகள் பதிவு

பதற்றமான வாக்குச்சாவடிகள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


