மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 8:20 pm

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 76 பயனாளிகளுக்கு ரூ. 77.36 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு இணைப்பு ஸ்கூட்டா்களை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தோ்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேலூா் மக்களை இன்னும் சந்திக்க வேண்டியுள்ளது. விரைவில் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும். ஓபிஎஸ் தொடா்பான அறிவிப்பு ஏதும் இருந்தால், அதை முதல்வா் வெளியிடுவாா்.

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை எப்போதுமே சுமுகமாகத்தான் இருந்திருக்கிறது. ஏனென்றால், அது நீண்ட நாள்களாக கொள்கைக்காக உருவாகி இருக்கக்கூடிய உறவு என்றாா்.

அமைச்சா் கே.என். நேரு குறித்த கேள்விக்கு, தோ்தல் வந்துவிட்டதால் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றை பாஜக பயன்படுத்துகிறது என்றாா் அவா்.