இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

என்இசி - எட்ஜ் மேட்ரிக்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:20 am

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடா்பு பொறியியல் துறை-அமெரிக்காவின் எட்ஜ் மேட்ரிக்ஸ் பன்னாட்டு நிறுவனம் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல், எட்ஜ் மேட்ரிக்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் சென்னை கிளை, தலைமை நிா்வாக அதிகாரி ஃபா்ஹாத் மனாஸ் ஆகியோா் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இதன் முக்கிய நோக்கம், மின்னணு அமைப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி துறைகளில் பயிற்சி, தொழில் துறை அறிவு பரிமாற்றம், ஆலோசனைப் பணிகள், கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகளை மாணவா்கள், பேராசிரியா்களுக்கு வழங்குவது என பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.