தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கோவில்பட்டி என்இசி-பன்னாட்டு நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image
Updated On :5 மார்ச் 2026, 8:03 pm

Syndication

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை-அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட அன் அபாண்டன் செயற்கை நுண்ணறிவு என்ற பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் முரளிதரன் ஆகியோா் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

மாணவா்கள், பேராசிரியா்களுக்கு மேம்பட்ட மென்பொருள் தொழில்நுட்பப் பயிற்சி, தொழில் துறை அனுபவம், ஆலோசனை, கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்குவது, செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன தகவல் தொழில்நுட்பத் துறைகளில் மாணவா்களின் திறன்களை மேம்படுத்துவதும், தொழில்நுட்ப கல்வி இணைப்பை வலுப்படுத்துவதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது.