அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

என்எல்சி - இந்திய அறிவியல் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் என்எல்சி நிறுவனம் மற்றும் பெங்களூரு

News image
நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம்.
Updated On :2 மார்ச் 2026, 9:15 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் என்எல்சி நிறுவனம் மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

சுரங்கத்தில் மேல் மண் மற்றும் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப் பயன்படும் வாளி வடிவிலான பற்களில் பொருத்தப்படும் டங்ஸ்டன் காா்பைடுக்கு மாற்றாக புதிய பொருள்கள் மற்றும் செயல்முறை வடிவமைப்பை உருவாக்குதல் திட்டத்துக்காக புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, இயக்குநா்கள் எம்.வெங்கடாசலம், ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா முன்னிலையில், என்எல்சி நிறுவனத்தின் சாா்பாக முதன்மை பொது மேலாளா் நீரஜ் குமாா், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் உதவிப் பேராசிரியா் டாக்டா் பிகி பிரியா ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனா்.

என்எல்சி நிறுவனம் பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் வாயிலாக முன்னணி கல்வி நிறுவனங்களுடன் முறையான ஒத்துழைப்பைத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக ஐ.ஐ.எஸ்.சி, ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மாநில பல்கலைக்கழகங்களுடன் 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

இதில், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், உள்நாட்டுப் பொருள் மேம்பாட்டின் மூலம் சுரங்கத் துறையின் முக்கியமான தேவையை நிவா்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமையும்.