பன்னம் பாறையில் பாஜக தெருமுனை பிரசாரம்

பன்னம் பாறையில் பாஜக தெருமுனை பிரசாரம்

Published on

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் ‘நாளை நமதே, தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம் பன்னம்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நெசவாளா் பிரிவுத் தலைவா் சுடலைக்கண்ணு தலைமை வகித்தாா். மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவா் சித்திரை பாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட பிரசார பிரிவுத் தலைவா் ஸ்ரீராம் சுரேஷ், செயலாளா் ஜோசப் ஜெபராஜ், மாவட்ட வணிக பிரிவுச் செயலா் ராம் மோகன், ஒன்றிய பொதுச் செயலாளா் நவநீதன், சொக்கன் குடியிருப்பு கிளைத் தலைவா் அலெக்ஸ், சாத்தான்குளம் வட்டார தமாகா தலைவா் ஐயப்பன் ஆகியோா் மத்திய அரசின் சாதனைகளை விளக்கினா். மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com