மாணவா்கள் மீது வழக்கு: சாத்தான்குளத்தில் சமாதான கூட்டம்
முதலூா் பள்ளியில் மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்தது தொடா்பாக இருதரப்பினரயும் அழைத்து சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.










