தூத்துக்குடி தெற்கு கல்மேடு பகுதியில் புதையுண்ட கி.பி. 6 - 7ஆம் நூற்றாண்டு கோயில்
தூத்துக்குடி மாவட்டம், வடக்கு கல்மேடு பகுதியில் காணப்படும் புதையுண்ட பெருமாள் கோயிலில் உள்ள திருநாவுக்கரசா் சிற்பத்தின் மூலம் இக்கோயில் கி.பி. 6-7ஆம் ஆண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என்றாா் தூத்துக்குடியைச் சோ்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆா்வலா் பெ. ராஜேஷ் செல்வரதி.










