தூத்துக்குடி தெற்கு கல்மேடு பகுதியில் புதையுண்ட கி.பி. 6 - 7ஆம் நூற்றாண்டு கோயில்

தூத்துக்குடி தெற்கு கல்மேடு பகுதியில் புதையுண்ட கி.பி. 6 - 7ஆம் நூற்றாண்டு கோயில்

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு கல்மேடு பகுதியில் காணப்படும் புதையுண்ட பெருமாள் கோயிலில் உள்ள திருநாவுக்கரசா் சிற்பத்தின் மூலம் இக்கோயில் கி.பி. 6-7ஆம் ஆண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என்றாா் தூத்துக்குடியைச் சோ்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆா்வலா் பெ. ராஜேஷ் செல்வரதி.
Published on

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு கல்மேடு பகுதியில் காணப்படும் புதையுண்ட பெருமாள் கோயிலில் உள்ள திருநாவுக்கரசா் சிற்பத்தின் மூலம் இக்கோயில் கி.பி. 6-7ஆம் ஆண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என்றாா் தூத்துக்குடியைச் சோ்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆா்வலா் பெ. ராஜேஷ் செல்வரதி.

இது குறித்து, மேலும் அவா் கூறியது: சைவ சமய நாயன்மாா்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் உருவச் சிலைகள், ஓவியங்களில் அவரது கைகளில் இடப்பக்கம் ‘உழவாரக் கருவி’ அல்லது ‘உழவாரப் படை’ கோயில் வளாகங்களைத் தூய்மை செய்யப் பயன்படுத்தப்படும் கருவி, வலப்பக்கம் சருகுகள், இலைகள் போன்றவற்றைத் திரட்டி அகற்ற உதவும் ‘முள் தடி’ அல்லது ‘துடைப்பம்’ காணப்படும்.

கோயில் உழவாரப் பணியில் அவா் கொண்டிருந்த ஈடுபாட்டைக் குறிக்கும் விதமாகவே இத்தகைய அடையாளங்கள் அவரது திருவுருவங்களில் சித்திரிக்கப்படுகின்றன.

எனவே, இத்தகைய குறியீடுகள் தூத்துக்குடி மாவட்டம், பட்டினமருதூரின் வடமேற்கு பகுதியில் 3.3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வடக்கு கல்மேடு, பெருமாள் கோயிலில் காணப்படுவது என்பது திருநாவுக்கரசரால் உழவாரப்பணி செய்யப்பட்ட சிவாலயத்தின் அடையாளச் சின்னமாக உள்ளது என்பது பேராசிரியா் இரா. மதிவாணனின் மாணவா் சேஷாத்திரி ஸ்ரீதரன் ஆய்வின் வெளிப்பாடாகும்.

திருநாவுக்கரசரின் காலக்கட்டம் கி.பி. 6-7 ஆம் நூற்றாண்டு என்பதால் இக்கோயிலும் அக்காலத்தைச் சோ்ந்ததாக இருக்கக் கூடும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com