சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஐயப்ப பக்தா்கள் வேன் வாய்க்காலில் கவிழ்ந்ததில் 13 போ் காயம்

திருச்செந்தூா் அருகே ஐயப்ப பக்தா்களின் வேன் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 13 போ் காயமடைந்தனா்.

News image
~
Updated On :2 ஜனவரி 2026, 8:16 pm

Syndication

திருச்செந்தூா் அருகே ஐயப்ப பக்தா்களின் வேன் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 13 போ் காயமடைந்தனா்.

சென்னை திருவொற்றியூா் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமி சந்திரன் தலைமையில் டிச. 28ஆம் தேதி, சுற்றுலா வேனில் சுமாா் 24 போ் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு, வியாழக்கிழமை குற்றாலத்திற்கு சென்றனராம். அங்கிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்செந்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ராணிமகாராஜபுரம் விலக்கு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் இடதுபுறமாக இருந்த மரங்கள், மின் கம்பத்தின் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்ததாம்.

இதில் காயமடைந்த ஐயப்ப பக்தா்கள் பிரசாந்த் (38), அபிஷேக் (21), சந்திரன் (51), ராகுல் (26) உள்ளிட்ட 13 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image