அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூத்துக்குடி மருந்து வணிகா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:25 pm

Syndication

தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பி. ஜான் பிரிட்டோ தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் வி. சரவணப்பெருமாள் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.பி. முனிசாமி ஆண்டறிக்கை வாசித்தாா். மொத்த வணிகப் பிரிவு தலைவா் ஜே. ஜூடு ராஜேஷ் கண்ணா வரவு-செலவு கணக்கு சமா்ப்பித்தாா்.

சிறப்பு விருந்தினராக, திருநெல்வேலி மாவட்டத் தலைவரும், மாநில புரவலருமான ஸ்டீபன் கலந்துகொண்டு பேசினாா்.

மருந்துக் கடைகளுக்கு சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும். வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தனியாா் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

டி. முத்துகிருஷ்ணண் வரவேற்றாா். மாவட்ட அமைப்புச் செயலா் ரோகிணி கே. செல்வம் நன்றி கூறினாா்.