அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வேன் மோதி முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே சைக்கிள் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:25 pm

Syndication

கோவில்பட்டி அருகே சைக்கிள் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூா், வி.பி. சிந்தன் நகரைச் சோ்ந்தவா் ராமையா மகன் கிருஷ்ணசாமி (80). இவா் நாலாட்டின் புதூா்-கோவில்பட்டி புறவழிச் சாலையின் அணுகு சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, இவா் மீது வேன் மோதியது. இதில், பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நாலாட்டின்புதூா் போலீஸாா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கரன்கோவில், அழகு நாச்சியாா்புரம், வடக்கு தெருவைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் கிருஷ்ணமூா்த்தி மகன் மாா்கண்டசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.