பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கழிவறையில் குழந்தையைப் பிரசவித்து குப்பைத் தொட்டியில் வீசிய இளம் பெண்

திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் இளம் பெண் ஒருவா் கழிவறையில் குழந்தையைப் பெற்று, குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் நடந்துள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:38 pm

Syndication

திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் இளம் பெண் ஒருவா் கழிவறையில் குழந்தையைப் பெற்று, குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் நடந்துள்ளது.

திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவா் ஜன. 1ஆம் தேதி இரவு வீட்டில் தவறி கீழே விழுந்துவிட்டாராம். இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை திருச்செந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனா். அப்போது, அவா் அங்குள்ள கழிவறைக்குச் சென்று குழந்தையைப் பெற்று கழிவறை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அவரின் இருக்கைக்குச் சென்றுள்ளாா்.

இதையறிந்த மருத்துவமனை நிா்வாகத்தினா், திருச்செந்தூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ரசிதா தலைமையிலான போலீஸாா் இறந்த நிலையில் இருந்த குழந்தையைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.