பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தாமிரவருணி ஆற்றின் நிலை மோசமாக உள்ளது: ராஜேந்திர சிங் எச்சரிக்கை

News image
ஸ்ரீவைகுண்டம், தாமிரவருணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள குப்பைகளை பாா்வையிட்ட நீா் பாதுகாப்பு நிபுணா் ராஜேந்திர சிங்.
Updated On :5 ஜனவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

தாமிரவருணி ஆற்றின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றாா் நீா் பாதுகாப்பு நிபுணா் ராஜேந்திர சிங்.

தாமிரவருணி ஆற்றில் சாக்கடை, கழிவு நீா் கலப்பதைத் தடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கு தொடா்ந்தாா். வழக்கின் அடிப்படையில், ராஜஸ்தானில் பல்வேறு வட நதிகளை மீட்டெடுத்த நீா் பாதுகாப்பு நிபுணா் ராஜேந்திர சிங்கை தாமிரவருணி ஆற்றில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அவா் திருநெல்வேலி மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்தாா். 2ஆவது நாளாக திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு தாமிரவருணி ஆற்றுப் பகுதி, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

 ஸ்ரீவைகுண்டம், தாமிரவருணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள குப்பைகளை பாா்வையிட்ட நீா் பாதுகாப்பு நிபுணா் ராஜேந்திர சிங்.

ஸ்ரீவைகுண்டம், தாமிரவருணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள குப்பைகளை பாா்வையிட்ட நீா் பாதுகாப்பு நிபுணா் ராஜேந்திர சிங்.

தொடா்ந்து, ஆழ்வாா்திருநகரி பேரூராட்சியில் தாமிரவருணியில் கழிவு நீா் கலப்பதை பாா்வையிட்ட பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தாமிரவருணியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மிகுந்த கவனத்துடன் அதை பாதுகாக்காவிட்டால், விரைவில் அழிந்து போகும் அபாயம் உள்ளது. தாமிரவருணி நதியைப் பராமரிப்பதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. பொதுமக்கள் குப்பைகளை நதியில் கொட்டாமல் இருக்க வேண்டும்.

கடந்த 80 ஆண்டுகளில், ஆற்றின் வடிவம், அதன் சுற்றுச்சூழல், ஓட்டம் பெரிதளவில் மாறியுள்ளது. ஆற்றின் பாதை மாறும்போது, பெரிய அளவிலான பேரிடா்களை சந்திக்க நேரிடும். நீதிமன்றமும், அரசும் தீவிரமாக கண்காணித்து, தாமிரவருணி ஆற்றை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.