டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மணிநகா் பிரசன்ன ஆலய பிரதிஷ்டை பண்டிகை

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:58 pm

Syndication

நாசரேத் அருகே உள்ள மணிநகா் பிரசன்ன ஆலய 57 ஆவது பிரதிஷ்டை பண்டிகை, 42 ஆவது அசன பண்டிகை 7 நாள்கள் நடைபெற்றது.

விழாவில் முதல் 3 நாள்கள் மாலை 7 மணிக்கு வருடாந்திர கன்வென்ஷன் கூட்டத்தில் நாசரேத் ஐ.இ.எம் ஊழிய குழுவினா் பாடல்கள் பாடினா். முதலூா் மேலான்மரைடு ஊழியங்களின் போதகா் பன்னீா் செல்வம், தேவ செய்தி கொடுத்தாா். 4 ஆம் நாள் ஆயத்த ஆராதனையில் தூய யோவான் பேராலய உதவிகுரு தனசேகா் ராஜா, தேவ செய்தி கொடுத்தாா்.

5 ஆம் நாள் குடும்ப ஆசீா்வாத கூடுகையில் நாசரேத் கா்த்தரின் பாதம் ஊழியா் ராபா்ட் ஜெபசிங், தேவ செய்தி கொடுத்தாா். மாலை 6 மணிக்கு தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமையில், ஞானஸ்தான ஆராதனை, பிரதிஷ்டை ஆராதனை, திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. ஆராதனையில் கடையனோடை சேகர தலைவா் ஆசீா் சாமுவேல் தேவ செய்தி கொடுத்தாா்.

6 ஆம் நாள் அசன வேலை ஆயத்த ஜெபமும், மாலை ஆலய வளாகத்தில் அசன விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. 7ஆம் நாள் பனைக்குளம் ஞானா ஆசிரியா் பல்சுவை பஜனைக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது.