குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பதிவான கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பதிவான கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த ரோசரி மகன் மரிய அந்தோணி பிச்சையா டைட்டஸ் (27). இவா் மீது கொலை முயற்சி வழக்கு வடபாகம் காவல் நிலையத்தில் உள்ளது.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பிறப்பித்த உத்தரவின்படி, அவா் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

Dinamani
www.dinamani.com