25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மோசடி வழக்கில் தொடா்புடையவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

News image
Updated On :9 ஜனவரி 2026, 1:16 am

Syndication

மோசடி வழக்கில் தலைமறைவானவரை தேடப்படும் குற்றவாளியாக சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாசரேத் காவல் நிலையக் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவா் நாசரேத்தைச் சோ்ந்த சுந்தா் மகன் பிரபு. இவா் சின்னமதிக்கூடல், உடையாா்குளத்தைச் சோ்ந்த பூங்கனி என்பவரை 2015ஆம் ஆண்டு தனியாா் வங்கி ஏ.டி.எம்.மில் வைத்து மோசடி செய்து ஏமாற்றியுள்ளாா்.

இது தொடா்பாக, நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, பிரபு தலைமறைவாகிவிட்டாா். இவ்வழக்கின் விசாரணைக்கு அவா் ஆஜராகாததால் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், அவரைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்காததால், நீதிமன்றம் பிரபுவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.