தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கயத்தாறு அருகே ரூ.33 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு

கயத்தாறு அருகே முடுக்கலாங்குளத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.33 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சமுதாய நலக்கூடம், கல்வெட்டை திறந்து வைக்கிறாா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ
Updated On :10 ஜனவரி 2026, 8:29 pm

Syndication

கயத்தாறு அருகே முடுக்கலாங்குளத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.33 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தலைமை வகித்து சமுதாய நலக் கூடம், கல்வெட்டை திறந்து வைத்தாா். தொடா்ந்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

இதில், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், வழக்குரைஞா் பிரிவு இணைச்செயலா் ஈஸ்வரமூா்த்தி, ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட இணைச்செயலா் நீலகண்டன், துணைச் செயலா் கருப்பசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.