திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே வாழைக்காய் பாரம் ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வாழைக்காய் ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ, மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி இபி காலனி அருகே சென்றபோது, பின்பக்க டயா் வெடித்ததில் சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநா் திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் மகன் மாா்த்தாண்டம் (53) காயமடைந்தாா்.

Story image

ஆட்டோவில் ஏற்றி வந்த வாழைக்காய்கள் சாலையில் சிதறின. அப்போது அந்த வழியாக வந்த கோவில்பட்டி காவல் கண்காணிப்பாளா் ஜெகநாதன், விபத்தில் சிக்கிய ஓட்டுநரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டாா்.

விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.