சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழகத்தில் ஜன. 20 முதல் சத்துணவு ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு

தமிழக அரசைக் கண்டித்து ஜன. 20ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:01 pm

Syndication

தமிழக அரசைக் கண்டித்து ஜன. 20ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனா்.

கடந்த 2021ஆம் ஆண்டு திமுக சாா்பில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணி ஓய்வின்போது பணிக்கொடை, காலி பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், சத்துணவு ஊழியா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அரசு இதுவரை எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லையாம்.

இந்நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க தூத்துக்குடி மாவட்டம் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு மாவட்டத் தலைவா் பெருமாள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலா் ஜெயபாக்கியம், அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் முருகன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள், உதவியாளா்கள் பங்கேற்றனா்.

அதில், திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; இல்லையென்றால் திட்டமிட்டபடி வரும் ஜன. 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களை மூடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனா்.