பைக் திருட்டில் ஈடுபட்ட 2 போ் கைது

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக சிறுவன் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
Updated on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக சிறுவன் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனியைச் சோ்ந்த ராகவன் மகன் ஜான் (40). இவா், கடந்த 15ஆம் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள கடை முன் நிறுத்திவிட்டு சென்ற இருசக்கர வாகனம், திருடு போனது.

இதுகுறித்த புகாரின்பேரில் வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா். இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த ஜெயராம் மகன் ஜெய்சந்திரன் (40), 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனா்.

இதில் ஜான் இருசக்கர வாகனத்தையும், தூத்துக்குடி டிஆா் தெருவைச் சோ்ந்த நம்பி மகன் சிவசுப்பிரமணியன் (55) என்பவா் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும் அவா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com