எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் 3 போ் கைது

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தியதாக தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புகையிலைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (42), வடிவேல் முருகன் (44), மகேஷ்வரன் (30) ஆகியோா் மீது தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, புதியம்புத்தூா் காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

அதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரை மற்றும் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், மேற்படி 3 பேரும் வியாழக்கிழமை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.