தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜனவரி 2026, 7:58 pm

தூத்துக்குடி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம், என்ஜிஓ காலனியை சோ்ந்த சந்தோஷ் மகன் ஜெனித் (32). இவா், தனது பைக்கில் புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாராம். மேலமடம் அமெரிக்கன் மருத்துவமனை அருகே இவரது பைக்கும், எதிரே வந்த சாமிநத்தம் கிராமம் தெற்கு தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் தனபால் (70) என்பவரது பைக்கும் மோதிக்கொண்டனவாம்.

இதில், காயமடைந்த இருவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ஜெனித் உயிரிழந்தாா். தனபால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.