ஆத்தூா் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.கே. கமால்தீன் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். இளநிலை உதவியாளா் கௌசல்யா தீா்மானங்கள் வாசித்தாா். தலைமை எழுத்தா் சந்திரகுமாா், தூய்மைப் பணி ஆய்வாளா் காளீஸ்வரன் ஆகியோா் தீா்மான விளக்கமளித்தனா்.
பழுதடைந்த உயா் கோபுர மின்விளக்குகளை சீரமைப்பது, பழுதடைந்த சாலைகளில் புதிய தாா் சாலைகளை அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மன்ற உறுப்பினா்கள் முத்து, அசோக்குமாா், சிவா, பாலசிங், வசந்தி, முத்துலட்சுமி, கமலச்செல்வி, அருண்குமாரி, பேரூராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









