தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

காமராஜா் குறித்து அவதூறு விவகாரம்: முக்தார் மீது விசாரணை நடத்த தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

காமராஜா், நாடாா் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய யூடியூபா் முக்தாா் அகமது மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

யூடியூபர் முக்தார் - படம்: முகநூல்

Updated On :4 ஜூலை 2026, 2:28 am IST

காமராஜா், நாடாா் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய யூடியூபா் முக்தாா் அகமது மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வா் காமராஜா், நாடாா் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப் சேனலில் பேசிய முக்தாா் அகமது மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு, பாலகிருஷ்ணன் என்பவா் முத்தையாபுரம் காவல் நிலையத்தில், மேல் அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தாா்.

இந்த புகாா் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்குரைஞா் ஜெயச்சந்திரன் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் எண் 2இல் மனுதாக்கல் செய்தாா்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இலக்கியா, முக்தாா் அகமது மீதான புகாரின் மீது முதல்நிலை விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு முத்தையாபுரம் காவல் நிலையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.