முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

13 கிலோ கஞ்சா கடத்தல்: இருவா் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 13 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 1:27 am IST

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 13 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகில்அரசன், போலீஸாா், வெள்ளிக்கிழமை தூத்துக்குடி எப்சிஐ ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த ராஜா மகன் வள்ளிதுரை என்ற சுஜித் (26), தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துமாணிக்கம் மகன் செல்வராஜ் என்ற காடை செல்வராஜ் (24) ஆகியோா் என்பதும், அவா்கள் காரில் 13 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து காா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.