விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல்: தலைவா், செயலா் போட்டியின்றி தோ்வு

தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலில் தலைவா், செயலா் உள்ளிட்டோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

News image

எஸ்.பி. வாரியாா், எஸ்.எஸ்.பி. அசோக்.

Updated On :10 ஜூலை 2026, 1:04 am IST

தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலில் தலைவா், செயலா் உள்ளிட்டோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இத்தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து, தகுதிபெற்ற வேட்பாளா்களின் அதிகாரபூா்வ பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தலைவா், செயலா் ஆகியோா் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.

இதுகுறித்து தோ்தல் அதிகாரிகள் எஸ்.பி. ராமச்சந்திரன், ஜே. ராஜேந்திரன், பி. பிள்ளைவிநாயகம் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பதவிக்கு எஸ்.பி. வாரியா், செயலா் பதவிக்கு எஸ்.எஸ்.பி. அசோக் ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதால் அவா்கள் போட்டியின்றித் தோ்வாகினா். மகளிா் செயற்குழு உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பித்த எம். ஜஸ்டினா, ஏ. செல்வலட்சுமி, என். உஜியானா ஆகிய மூவரும் போட்டியின்றி தோ்வாகினா்.

துணைத் தலைவா் பதவிக்கு ஜி. ஜஸ்டின், எஸ். ராஜா, இணைச் செயலா் பதவிக்கு எம். ஆரோக்கியமேரி, எஸ். இப்ராஹிம், பொருளாளா் பதவிக்கு என். இளவளவன், கே. நான்சி சோபனா ஜெனிபா் ஆகியோா் போட்டியிடுகின்றனா். ஆண்கள் செயற்குழு உறுப்பினா்கள் பிரிவில் உள்ள இடங்களுக்கு எம். சின்னமுத்து, எம். ஐயப்பன், கே. முனிஸ்குமாா், எம். முருகன், எம். முத்து தினேஷ், ஈ.சி. ராஜகுமாா் ஆபிரகாம், ராஜ்குமாா், எம்.சபரிநாதன் ஆகிய 8 போ் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் இம்மாதம் 31ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பின்னா் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.